amazon associates

amazon associates

Pages

Tuesday 25 May, 2010

கனவுகள் ஓர் அறிமுகம்

வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

“அனைவரும் கனவு காண்பது சகஜம் தானே! இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது... என்று நினைப்ப வராக இருந்தால் உங்கள் கரு... மேலும் பார்க்கத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டிய சமயம் இதுவே!

உடல், மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே கனவு என்கிறோம். இச் சூழலில் உடல், மனம், மற்றும் உயிர் தங்கள் கருத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி பரிமாறிக் கொள்கின்றன. இச்செயல் இவை மூன்றையும் சரிசமம் செய்து ஆரோக்கிய வாழ்விற்கு வழி செய்கிறது.

எப்பொழுது மூளை, மனம் மற்றும் உயிராற்றல் ஓய்வு நிலையில் இருக்கிறதோ அவ்வேளையில் முன்னர் சேமிக்கப்பட்ட பதிவுகளை மறுசீராய்வு செய்யப்படுகிறது. அப்போது மனதில் சேமிக்கப்பட்ட மனக்கிளர்ச்சிகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் இவற்றோடு குறுகிய கால நினைவுகள் இணைந்து ஒலி, ஒளி வடிவிலான ஒரு ஒழுங்கு முறை நிறைந்த மனத்திரைப்படமே கனவு எனப்படுகிறது. இனி கனவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.

வரலாறுகளில் கனவுகள் பற்றி:

பழங்காலங்களில் சில இன மரபுக் குழுக்கள் கனவுகளை ஆராய்ந்து அதில் தங்கள் குழு பற்றியும், மனிதர்கள் பற்றியும் புரிந்து கொள்ள முயன்றனர்.

கிரேக்கர்கள் கனவுகளைக் கொண்டு, நோய்களைக் கண்டறியவும், குணப்படுத்தவும் பல வழிமுறைகளை கண்டனர். இவர்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் மருத்துவமனைகளையே கட்டினர். அதனை அஸ்கிலாபியன் சாங்சுவரிஸ் (Asklepian Sanctuaries) என்று அழைத்தார்கள்.

19ம் நூற்றாண்டில் பல மேற் குடி மக்கள் இத்துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டனர். எவ்வாறு ஒலி, வாசனை போன்றவை ஒன்றினைந்து செயல்பட்டு கனவு களின் உட்பொருளை பாதிக்கின்றன என்பதனை விரிவாக ஆராய்ந்தனர்.

20ம் நூற்றாண்டில் கனவு அறிவியலுக்கு முக்கியத்துவம் உயர்ந்தது. முக்கியமாக ரெம் (REM) தூக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஆராய்ச்சிகள் வெகுவாக உயர்ந்தன.

கலாச்சாரமும் கனவும்:

பாபிலோனியர்கள் கனவுகளை தெய்வத்திடமிருந்து வரும் நற்செய்திகளாகவும் தீய சக்திகளிடமிருந்து வரும் கெட்ட செய்திகளாக வும் கருதுகின்றனர்.

அசீரியர்கள் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும் அறிகுறிகளாக கனவுகளைக் கருதினர். கெட்ட கனவுகளுக்கு உடனடி பரிகாரங்கள் செய்ய வேண்டும் என கருதினர். மற்ற கனவுகளை ..ஆலோசனைகளாக நினைத்தனர்.

எகிப்தியர்கள் கனவுகளை கடவுள் தங்களுக்கு கூறும் செய்திகளாகவும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் தீய காரியங்களுக்கு எச்சரிக்கைகளாகவும் கருதினர்.

கிரேக்கர்கள் எதிர்காலம் பற்றி கூறுவனவாக கனவுகள் அமைகின்றன என்கின்றனர். சில சமயம் நல்ல கனவுகள் மட்டும் வர வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை பின் பற்றினர். ரோமானியர்களும் இதனை யே நம்பினர்.

ஜப்பானியர்கள் தங்கள் ஆழ்மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் களாகவும், தங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பதில்களைத் தருவதாகவும் கனவுகளைக் கருதினர்.

காவியக் கனவுகள்:

இவை மிகவும் அழகாக, பிரம் மாண்டமாக அமைந்திருக்கும். இந்தக் கனவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். இந்த கனவுகளில் தோன்றும் காட்சிகள் உண்மையிலேயே உள்ளது போலத் தோன்றும். இக் கனவு முடிந்து துயில் எழும்போது ஏதோ ஒன்றை கண்டுபிடித்தது போன்ற வியப்பு நமக்குள் எழும்.

7... மேலும் பார்க்க.நோய் நீக்கும் கனவு: இவ் வகைக் கனவுகள் கனவு காண்பவரின் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்களை சொல்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இதனை நோய் வருவதற்கு முன் வரும் செய்தியாக கருதுகின்றனர். ஆராய்ச்சி களில் ஆஸ்த்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற நோய் உடையவர்கள் நோய் தாக்குவதற்கு முன்பு ஒருவித எச்சரிக்கை கனவுகள் காண்கின்றனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கனவின் போது நமது உடல் உயிர் மற்றும் மனம், ஒன்றுக்கொன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்வதால் இது சாத்தியமாகிறது என்கின்றனர். இவ்வாறு நோய் வருவதை எச்சரிக்கை ஒலியாக உணர்த்துவது மட்டுமின்றி, அந்நோயை எவ்வாறு சரி செய்வது என்று கூட ஆலோசனையும் வழங்குவதுண்டு என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

8. பொய் விழிப்பு கனவுகள்:

நாம் சில சமயம் காலையில் துயில் கலைந்து எழுந்து, பல் துலக்கி, குளித்து, உணவு உண்டு முடித்து, வேலைக்கு சென்றது போல உணர்வோம். ஆனால் பிறகு தான் தெரியும் அது அத்தனையும் கனவு என்று! இதைத்தான்என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

சிக்மண்ட் ப்ராய்டு-(1856 -1939)

சிக்மண்ட் ப்ராய்டு உள்ளப் பகுப்பாய்வின் தந்தையாக கருதப்படுகிறார். அவர் “தி இன்டர்பிரடேசன் ஆப் டிரீம்ஸ் (Interpretation of Dreams) என்ற புத்தகத்தின் மூலம் இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.

நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நமது அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனது கட்டுப்படுத்துகிறது.

இந்த நாகரீக உலகில் அனைவருடனும் ஒத்து வாழ நாம் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும், அடக்கியும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆதலால் இவ்வகை உணர்ச்சிகள் வேறு சில வழிகளில் வெளிப்படுகின்றன. இவ்வாறு உணர்ச்சிகளை வெளிக் கொணரும் ஒரு வழியே கனவுகள் என்று ப்ராய்டு கூறுகிறார்.

நமது ஆழ்மனம் உணர்வுகளை குறியீட்டு மொழியில் (உருவக வடிவில்) வெளிப்படுத்துகிறது.

மரு. ப்ராய்டு மனதின் தன்மைகளை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.

1. இட் (Id) : இன்பம், விருப்புகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பத்தீர்வு

2. ஈகோ (Ego): விழிப்பு நிலை, பகுத்தறிதல், தன்னிலை அறிதல், போன்றவை

3. சூப்பர் ஈகோ (Super Ego): இது இட் டினை தணிக்கை செய்து பகுத்தறிந்து ஈகோவினை வெளிக் கொணர்கிறது
நாம் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது இட்- டின் உணர்வுகள் மற்றும் விருப்புகள் சூப்பர் ஈகோவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஆனால் தூக்கத்தின் போது இது செயல்படுவதில்லை என்பதால் இந்த உணர்வுகள் கனவுகளாக வெளி வருகின்றன.

இட்- டின் உணர்வுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பனவாக இருந்தால் அது தணிக்கை செய்யப்பட்டு, குறியீட்டு மொழிகளாக மாற்றி கனவுகளில் ஓட வ... மேலும் பார்க்கிடுகிறது. இதனால் இட் டின்உணர்வுகளும் வெளிப்படுகின்றன. தூக்கமும் கலைவதில்லை. சில சமயம் வரும், குழப்பக் கூடிய மற்றும் முழுமை பெறாத கனவுகளுக்கும் இந்த செயல் முறையே காரணம்.

எனவே கனவுகளை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதனின் மனதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே ப்ராய்டு கனவுகளை ஆழ்மனதின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள இட்டுச் செல்லும் இராஐ பாட்டைகள் என்று குறிப்பிடுகிறார்.

ப்ராய்டு கனவுகளில் வரும் உருவகங்களை 5 வகைகளாகப் பிரிக்கின்றார்.

1. மாற்றி அமைத்தல் (Displacemஎன்ட்): கனவில் வரும் ஒரு பொருளின் கருத்தை வேறொரு பொருளில் திணித்து விடுவது.

2. வெளிப்படை (Projection):

கனவில் தன்னுடைய ஆசைகள், உணர்வுகள் மாற்றமின்றி அப்படியே வருவது ஆகும்.

3. குறியீடு (Symbolisation):

அடக்கப்பட்ட உணர்ச்சிகளும் ஆசைகளும் உருவக வடிவில் கனவாக வரும். இதில் ஒரு செயல் அல்லது எண்ணம் அப்படியே வரும்.

4. சுருக்குதல் (Condensation):

இச்செயல் கனவில் நமது உணர்வுகளையும, விருப்புகளையும், சுருக்கித் தொகுத்து வழங்குகிறது. அதனால் கனவின் பொருளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. கனவில் வரும் ஒரு பொருளானது பல உணர்வுகள், எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கும்.

5.கோர்வை (Rationalisation): இச்செயல் கனவுகளை வரிசைப்படுத்தி இறுதியாக ஒரு பொருள் பொதிந்த கனவுகளை கோர்வையாகத் தருகிறது.

கார்ல் ஜங்க் (Carlo jung)- (1875-1960) என்பவர், மரு. ப்ராய்ட் இடம் பயிற்சி பெற்றவர். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டவர். இவரும் ப்ராய்டு போன்றே ஆழ் மனது தான் கனவுகளைக் கட்டுப்படுத்துகிறது என நம்பினார். ஆழ் மனது, மிருகத்தன்மை உடையது, உள்ளுணர்வு மிகுந்தது, பாலுணர்ச்சி கொண்டது போன்ற ப்ராய்டின் கருத்துக்களை ஏற்கவில்லை.

கார்ல் ஜங்க், கனவுகளை புரிந்து கொள்ள உதவும் கருவியாக ஆழ்மனது இருக்கிறது என்று கூறினார். ஆழ்மனதினை தெய்வீகத் தன்மை மிகுந்தது என்றும், கனவுகள் ஆழ்மனதின் சன்னல்கள் என்றும் கூறினார்.

ஜங்கியன் உள நிலைப் பகுப்பாய்வில் (Classical Jungian Psycho analysis) கனவுகளை ஆய்வது மிக முக்கியம் ஆகும். மனம் என்பது தன்னைத் தானே ஆளும் சக்தி கொண்டது. இந்த மனமானது உணர்வு நிலையின் பண்புகளை, உணர்வற்ற நிலையில் எதிர் மறை பண்புகள் கொண்
பொய் விழிப்பு கனவுகள்:

நாம் சில சமயம் காலையில் துயில் கலைந்து எழுந்து, பல் துலக்கி, குளித்து, உணவு உண்டு முடித்து, வேலைக்கு சென்றது போல உணர்வோம். ஆனால் பிறகு தான் தெரியும் அது அத்தனையும் கனவு என்று! இதைத்தான்என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

சிக்மண்ட் ப்ராய்டு-(1856 -1939... மேலும் பார்க்க)

சிக்மண்ட் ப்ராய்டு உள்ளப் பகுப்பாய்வின் தந்தையாக கருதப்படுகிறார். அவர் “தி இன்டர்பிரடேசன் ஆப் டிரீம்ஸ் (Interpretation of Dreams) என்ற புத்தகத்தின் மூலம் இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.

நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நமது அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனது கட்டுப்படுத்துகிறது.

இந்த நாகரீக உலகில் அனைவருடனும் ஒத்து வாழ நாம் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும், அடக்கியும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆதலால் இவ்வகை உணர்ச்சிகள் வேறு சில வழிகளில் வெளிப்படுகின்றன. இவ்வாறு உணர்ச்சிகளை வெளிக் கொணரும் ஒரு வழியே கனவுகள் என்று ப்ராய்டு கூறுகிறார்.

நமது ஆழ்மனம் உணர்வுகளை குறியீட்டு மொழியில் (உருவக வடிவில்) வெளிப்படுத்துகிறது.

மரு. ப்ராய்டு மனதின் தன்மைகளை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.

1. இட் (Id) : இன்பம், விருப்புகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பத்தீர்வு

2. ஈகோ (Ego): விழிப்பு நிலை, பகுத்தறிதல், தன்னிலை அறிதல், போன்றவை

3. சூப்பர் ஈகோ (Super Ego): இது இட் டினை தணிக்கை செய்து பகுத்தறிந்து ஈகோவினை வெளிக் கொணர்கிறது.

நாம் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது இட்- டின் உணர்வுகள் மற்றும் விருப்புகள் சூப்பர் ஈகோவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஆனால் தூக்கத்தின் போது இது செயல்படுவதில்லை என்பதால் இந்த உணர்வுகள் கனவுகளாக வெளி வருகின்றன.

இட்- டின் உணர்வுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பனவாக இருந்தால் அது தணிக்கை செய்யப்பட்டு, குறியீட்டு மொழிகளாக மாற்றி கனவுகளில் ஓட விடுகிறது. இதனால் இட் டின்உணர்வுகளும் வெளிப்படுகின்றன. தூக்கமும் கலைவதில்லை. சில சமயம் வரும், குழப்பக் கூடிய மற்றும் முழுமை பெறாத கனவுகளுக்கும் இந்த செயல் முறையே காரணம்.

எனவே கனவுகளை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதனின் மனதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே ப்ராய்டு கனவுகளை ஆழ்மனதின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள இட்டுச் செல்லும் இராஐ பாட்டைகள் என்று குறிப்பிடுகிறார்.

ப்ராய்டு கனவுகளில் வரும் உருவகங்களை 5 வகைகளாகப் பிரிக்கின்றார்.

1. மாற்றி அமைத்தல் (Displacemஎன்ட்): கனவில் வரும் ஒரு பொருளின் கருத்தை வேறொரு பொருளில் திணித்து விடுவது.

2. வெளிப்படை (Projection):

கனவில் தன்னுடைய ஆசைகள், உணர்வுகள் மாற்றமின்றி அப்படியே வருவது ஆகும்.

3. குறியீடு (Symbolisation):

அடக்கப்பட்ட உணர்ச்சிகளும் ஆசைகளும் உருவக வடிவில் கனவாக வரும். இதில் ஒரு செயல் அல்லது எண்ணம் அப்படியே வரும்.
ருக்குதல் (Condensation):

இச்செயல் கனவில் நமது உணர்வுகளையும, விருப்புகளையும், சுருக்கித் தொகுத்து வழங்குகிறது. அதனால் கனவின் பொருளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. கனவில் வரும் ஒரு பொருளானது பல உணர்வுகள், எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கும்.

5.கோர்வை (Rationalisation... மேலும் பார்க்க): இச்செயல் கனவுகளை வரிசைப்படுத்தி இறுதியாக ஒரு பொருள் பொதிந்த கனவுகளை கோர்வையாகத் தருகிறது.

கார்ல் ஜங்க் (Carlo jung)- (1875-1960) என்பவர், மரு. ப்ராய்ட் இடம் பயிற்சி பெற்றவர். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டவர். இவரும் ப்ராய்டு போன்றே ஆழ் மனது தான் கனவுகளைக் கட்டுப்படுத்துகிறது என நம்பினார். ஆழ் மனது, மிருகத்தன்மை உடையது, உள்ளுணர்வு மிகுந்தது, பாலுணர்ச்சி கொண்டது போன்ற ப்ராய்டின் கருத்துக்களை ஏற்கவில்லை.

கார்ல் ஜங்க், கனவுகளை புரிந்து கொள்ள உதவும் கருவியாக ஆழ்மனது இருக்கிறது என்று கூறினார். ஆழ்மனதினை தெய்வீகத் தன்மை மிகுந்தது என்றும், கனவுகள் ஆழ்மனதின் சன்னல்கள் என்றும் கூறினார்.

ஜங்கியன் உள நிலைப் பகுப்பாய்வில் (Classical Jungian Psycho analysis) கனவுகளை ஆய்வது மிக முக்கியம் ஆகும். மனம் என்பது தன்னைத் தானே ஆளும் சக்தி கொண்டது. இந்த மனமானது உணர்வு நிலையின் பண்புகளை, உணர்வற்ற நிலையில் எதிர் மறை பண்புகள் கொண்டு சமன் செய்கிறது.

ஒவ்வொருவரும் தனித் தன்மை உடையவர் என்பதால் ஒருவரின் சூழலை அறிந்து அதற்கேற்ப அம் மனிதனின் கனவை பகுத்தறிய வேண்டுமே தவிர பொதுப்படையான குறியீட்டு மொழியினை உபயோகித்து பகுத்தறிவது உபயோகமற்றது.

எவ்வாறு மனம் விழிப்பு நிலையில் பல மொழிகளால் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறதோ அதே போல் விழிப்பற்ற நிலையிலும் கனவுகளின் மூலம் பல உணர்வுகளை மனம் வெளிப்படுத்துகிறது.

நாம் நமது வாழ்வில் சந்திக்கும் பல சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகள், கனவுகளில் குறியீட்டு மொழியில் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு நாம் நம்மை உலகிற்கு உருவகப்படுத்துகிறோம் என்பதே ஈகோ என்கிறார் ஜங்க்.

எந்த ஒரு விஷயத்தையும் நேர்-எதிர் மறை ஜோடிகளாக விவரிக்கலாம் என்கிறார். உதாரணமாக நல்லது, தீயது; ஆண்,பெண்; விருப்பு, வெறுப்பு....... ..இவ்வாறு வருபவை.நாம் பிறரிடம் வெளிப்படுத்தாத அல்லது அடக்கி வைத்துள்ளவற்றை நிழல் என்று குறிப்பிடுகிறார். இது பெரும்பாலும் நாகரீகமற்ற, முதிர்ச்சியற்ற, பண்பற்ற, அடிப்படை உணர்வுகளாகவே உள்ளன.

ஆல்பிரட் ஆட்லர் (1870-1937):

வாழ்க்கையை வெற்றிகரமாக இட்டுச் செல்ல கனவுகளை புரிந்து கொள்வது மிக அவசியம் என்று நம்பினார். இவர், கனவுகளை சிக்கல் தீர்க்கும் கருவிகளாகக் கருதினார். விழிப்பற்ற நிலையில் வரும் கனவுகளை விழிப்பு நிலையில் நினைவு கொண்டு ஆராய்ந்தால் பல சிக்கல்களுக்கு எளிதாக தீர்வு கண்டு விடலாம் என்கிறார்.

ஒருவர் நிறைய கனவு காண்பவராக இருப்பாராயின் அவரது வாழ்வில் பல பிரச்சனைகளை கொண்டவராக இருக்கலாம். அதே போல் குறைந்த அளவு கனவு காண்பவருக்கு குறைந்த அளவே பிரச்சனைகள் இருக்கலாம் என்கிறார்.

ப்ராய்டு பாலுணர்வே ஒருவரது நடத்தையை தீர்மானிக்கிறது என்று கூறும் வேளையில் ஒருவரது ஆற்றல், கட்டுப்பாடு, போன்றவையே ஒருவரது நடத்தையை தீர்மானிக்கிறது என்கிறார் இவர். விழிப்பு நிலை மற்றும் விழிப்பற்ற நிலை இரண்டுமே எதிர்மறையாக செயல்படுகின்றன என்னும் கூற்றை எதிர்த்தார். இரண்டும் எதிர்மறையாக செயல்படுவதற்கு பதிலாக ஒரே நோக்குடன் இயங்குகிறது என்றா
ஒவ்வொரு மனிதனையும், அவனுக்குள் இருக்கும் மியாசம் எனும் நோயை உண்டாக்கும் காரணி, அவனை பல வகைகளில் பாதிக்கிறது. ஒரு மனிதனின் மனப் போக்கும், மியாசத்தின் தன்மையை பொறுத்து மாறுபடுகிறது. ஒரு சில சமயங்களில், கனவுகள், நோயாளியின் மியாசத்தை கண்டுபிடிக்க பெரும் உதவி புரிகிறது.

முதலில் ஒவ்வொரு மியாசத் திலும் கனவுகள் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை காண்போம்.

ச... மேலும் பார்க்கோராவின் கனவுகள்:

சோரா மனிதர்கள் பெரும்பாலும் சுறுசுறுப்பாகவும், சகல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பவர்கள் என்பதால் அவரது கனவுகள் எதிர்பார்ப்பு மிகுந்தவைகளாக வரும். அவர்களின் மனதில் உள்ள கருத்துகளும் நிறைவேறாத ஆசைகளும் கனவுகளாக வரும். சோகம், அன்பு, பொறாமை, பயம் ஆகியவை சோராவின் கனவுகளில் மேலோங்கி இருக்கும்.

சைகோட்டிக் கனவுகள்:

இவர்களின் கனவுகள் மிகை உணர்வுகள் கொண்டதாக இருக்கும். இவர்கள் ஞாபகசக்தி குறைபாடு உடையவர்களாக இருப் பதால் அவர்களால் எளிதில் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. தோல்வி, நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை மற்றும் மரணம் நிகழ்வது போன்ற அடிப்படையில் கனவுகள் தோன்றும்.

டியுபர்குலர் மியாசக்கனவுகள்:

இந்த மியாசம் உள்ள மனிதர்கள் மனதளவில் மிகவும் சுறுசுறுப்பாகவும், கூர்மையாகவும் இருப்பர். ஆனால் உடல் எளிதில் சோர்ந்து விடும். இதனால் வேலை களில் ஏமாற்றமும் மனக்கசப்பும் அதிகரிக்கும். நீண்ட பயணங்களை விரும்புபவர்கள் என்பதால் பயணங்கள் மேற்கொள்வது போல் கனவுகள் வரும். மாற்றத்தை விரும்புபவர்கள் என்பதனை இந்த கனவு உணர்த்துவதாக உள்ளது. இவர்களது கனவுகள் பாலுணர்வு அல்லது காதல் மிகுந்ததாக இருக்கும்.

பல சமயங்களில் இவர்களது கனவுகள் தூக்கத்தை கலைத்து விடுகின்றன. இதனால் அன்று புத்துணர்ச்சி இன்றி காணப்படுவர். மறுபுறம் சிலர் குட்டித் தூக்கத் திலேயே மிகுந்த புத்துணர்ச்சி பெறுகின்றனர். இந்த மியாசம் மேலும் விரிவடையும் போது கனவுகளைத் தாண்டி திரிபுக் காட்சி அல்லது உணர்வு மருட்சி போன்றவை ஏற்படலாம்.

சிபிலிடிக் கனவுகள்:

இவர்கள் மிகவும் சோர்ந்து சக்தியிழந்து காணப்படுவர். இவர்கள் முரண்பாடான செயல்களைச் செய்வர். இதனால் சிறிது காலத்தில் வாழ்க்கையை வெறுத்து விடுகின்றனர். இது மனதில் தற்கொலை எண்ணங்களை வளர்த்து விடுகிறது.ஆகவே இவர்களது கனவுகள் கொலையுணர்வு, தற்கொலை போன்றவையாக இருக்கும். சுருக்கமாக சொல்வதென்றால் அழிக்கும் தன்மை இவர்களது கனவின் அடிப்படையாக இருக்கும்.
ஒவ்வொரு மனிதனையும், அவனுக்குள் இருக்கும் மியாசம் எனும் நோயை உண்டாக்கும் காரணி, அவனை பல வகைகளில் பாதிக்கிறது. ஒரு மனிதனின் மனப் போக்கும், மியாசத்தின் தன்மையை பொறுத்து மாறுபடுகிறது. ஒரு சில சமயங்களில், கனவுகள், நோயாளியின் மியாசத்தை கண்டுபிடிக்க பெரும் உதவி புரிகிறது.

முதலில் ஒவ்வொரு மியாசத் திலும் கனவுகள் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை காண்போம்.

சோராவின் கனவுகள்:

சோரா மனிதர்கள் பெரும்பாலும் சுறுசுறுப்பாகவும், சகல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பவர்கள் என்பதால் அவரது கனவுகள் எதிர்பார்ப்பு மிகுந்தவைகளாக வரும். அவர்களின் மனதில் உள்ள கருத்துகளும் நிறைவேறாத ஆசைகளும் கனவுகளாக வரும். சோகம், அன்பு, பொறாமை, பயம் ஆகியவை சோராவின் கனவுகளில் மேலோங்கி இருக்கும்.

சைகோட்டிக் கனவுகள்:

இவர்களின் கனவுகள் மிகை உணர்வுகள் கொண்டதாக இருக்கும். இவர்கள் ஞாபகசக்தி குறைபாடு உடையவர்களாக இருப் பதால் அவர்களால் எளிதில் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. தோல்வி, நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை மற்றும் மரணம் நிகழ்வது போன்ற அடிப்படையில் கனவுகள் தோன்றும்.

டியுபர்குலர் மியாசக்கனவுகள்:

இந்த மியாசம் உள்ள மனிதர்கள் மனதளவில் மிகவும் சுறுசுறுப்பாகவும், கூர்மையாகவும் இருப்பர். ஆனால் உடல் எளிதில் சோர்ந்து விடும். இதனால் வேலை களில் ஏமாற்றமும் மனக்கசப்பும் அதிகரிக்கும். நீண்ட பயணங்களை விரும்புபவர்கள் என்பதால் பயணங்கள் மேற்கொள்வது போல் கனவுகள் வரும். மாற்றத்தை விரும்புபவர்கள் என்பதனை இந்த கனவு உணர்த்துவதாக உள்ளது. இவர்களது கனவுகள் பாலுணர்வு அல்லது காதல் மிகுந்ததாக இருக்கும்.

பல சமயங்களில் இவர்களது கனவுகள் தூக்கத்தை கலைத்து விடுகின்றன. இதனால் அன்று புத்துணர்ச்சி இன்றி காணப்படுவர். மறுபுறம் சிலர் குட்டித் தூக்கத் திலேயே மிகுந்த புத்துணர்ச்சி பெறுகின்றனர். இந்த மியாசம் மேலும் விரிவடையும் போது கனவுகளைத் தாண்டி திரிபுக் காட்சி அல்லது உணர்வு மருட்சி போன்றவை ஏற்படலாம்.

சிபிலிடிக் கனவுகள்:

இவர்கள் மிகவும் சோர்ந்து சக்தியிழந்து காணப்படுவர். இவர்கள் முரண்பாடான செயல்களைச் செய்வர். இதனால் சிறிது காலத்தில் வாழ்க்கையை வெறுத்து விடுகின்றனர். இது மனதில் தற்கொலை எண்ணங்களை வளர்த்து விடுகிறது.ஆகவே இவர்களது கனவுகள் கொலையுணர்வு, தற்கொலை போன்றவையாக இருக்கும். சுருக்கமாக சொல்வதென்றால் அழிக்கும் தன்மை இவர்களது கனவின் அடிப்படையாக இருக்கும்
இவ்வாறு கனவுகளை ஆராயும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள்.

கனவுகள் நோயாளியின் நோய்க்குறிகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை கண்டுபிடிப்பதே மருத்துவரின் முக்கிய வேலையாகும். இது போன்ற கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, எல்லா கனவுகளையும் கொண்டு குழம்பி விடக் கூடாது.

ஒரு கனவு அவரை மிகவும் பாதிக்கிறது அல்லது தொடர்ந்து வருகிறது என்றால் அவரின் வாழ்வில் எந்த நிகழ்விற்குப் பின், எந்த பிரச்சனைக்குப் பின் அந்தக் கனவு முதன்முதலில் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பல சமயங்களில் எதார்த்தமாக நடக்கும் சாதாரண நிகழ்வுகள் கூட கனவுகளின் மையமாக அமையலாம். இந்த கருத்துக்களை மனதில் கொண்டு கனவுகளை ஆராய்ந்தால் நாம் சரியான மருந்தை தேர்வு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

இப்போது நம் மெட்டீரியா மெடிக்காவில் உள்ள சில கனவுகளைக் காண்போமா?

சல்பர்:

இம்மருந்து சோரா எதிர்ப்பு மருந்துகளின் அரசன் என்பதை அறிவோம். இவர்களின் கனவுகள், கற்பனைக்கு அப்பாற்பட்டதாக, பதட்டமும் பயமும் கலந்ததாக, கோரமான அருவருப்பானதாக, நெருப்பினால் அபாயங்கள் நிகழ்வது போல, நாய்கள் தன்னை கடிப்பது போல, வீழ்வது போல, மறுநாள் வேலைகள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிமயமான கனவுகள்.

உயிரோட்டமுள்ள அழகான, மகிழ்ச்சி நிறைந்த கனவுகளால் காலையில் பாட்டு பாடிக் கொண்டே எழுதல், சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுவது போல, நிஜ வாழ்வில் தொட முடியாதவற்றை தொட முயல்வது போல, சல்பர் மருந்தின் கனவுகள் இருக்கும்.

பிரையோனியா ஆல்பா:

குழப்பம் நிறைந்த கனவுகளால் நிம்மதியற்ற தூக்கம், எண்ண அலை ஒட்டங்கள் நிறைந்தது, தோல்வியால் வெறுப் படைந்திருப்பது போன்ற அடிப்படையில் நம்பமுடியாத கனவுகள், வழக்கமான நிகழ்வுகளின் உயிரோட்டமுள்ள கனவுகள் பிரையோனியாவில் இருக்கும்.

காஃபியா:

அதீத மகிழ்ச்சியால் தூக்கமின்மை, மகிழ்ச்சி நிறைந்த கனவுகள், நெருங்கிய நண்பர்கள் இறந்தது போன்ற கனவுகள், இத்தகைய கனவுகள் வந்த போதும், எதுவுமே நடவாதது போல் அதாவது எந்த ஒரு துக்கமும், கலக்கமும் இன்றி அப்படியே சமநிலையில் இருப்பர்.

ரஸ்டாக்ஸ்:

தூக்கக் கலக்கத்தில், மன அழுத்தம் நிறைந்த தொடர்ச்சியற்ற கனவுகள். பதட்டமும் பயமும் கலந்த கனவுகள், உயிரோட்டம் நிறைந்த தொழில் சம்பந்தப்பட்ட கனவுகள். கனவு காணும்போது பிதற்றுதல். உலகமே நெருப்பில் எரிவது போன்ற கனவுகள். நடப்பது, நீந்துவது, படகில் செல்வது போலவும், மலை ஏறுவது போலவும், கடினமாக உழைப்பது போன்றும் கனவுகள்.

விராட்ரம் ஆல்பம்:

பதட்டம் நிறைந்த கனவுகள், நாய் கடிப்பது போலவும் அதனிடமிருந்து தப்பிக்க முடியாதது போலவும் கனவுகள், தன்னை யாரோ வேட்டையாடுவது போல, திருடர்கள் வருவது போல, தகராறு செய்வது போன்ற கனவுகள், பயத்துடன் தூக்கம் கலைந்து கனவில் நடந்தது உண்மை சம்பவம் போன்ற எண்ணம்

தூஜா:

சைகோடிக் எதிர்ப்பு மருந்துகளின் தலைவன் தூஜாவின் கனவுகள்; அபாயம் நிறைந்த மன அழுத்தம் தரக்கூடிய பதட்டம் நிறைந்த கனவுகள், உறங்கிய சிறிது நேரத்திலேயே உயரத்தில் இருந்து விழுவது போல, திடீரென்று திடுக்கிட்டு அழுகையுடன் எழுவர். அதுவும் முக்கியமாக வலது புறம் சாய்ந்து படுத்திருக்கும் போது, சிற்றின்பம் சார்ந்த கனவுகள், விந்து வெளியேறாது ஆனால் எழும்போது விரைப்புடன் வலியும் இருக்கும். இறந்த நபர்களை தெளிவாகக் காண்பது போல உணர்வார், அந்த நபர்களுடன் உரையாடுவது போன்ற கனவுகள்
மெடோரினம்:

துன்பம் நிறைந்த வலி தரக்கூடிய சோர்வடையச் செய்யக் கூடிய கனவுகள், நடந்து கொண்டிருப்பது போல எதையோ அருந்திக் கொண்டிருப்பது போல, இறந்தவர்கள் வருவது போலவும், தீயசக்திகள் பேய்கள் இருப்பது போன்ற கனவுகள் வரும்.

மெர்க்குரியஸ்:... மேலும் பார்க்க

பதட்டமுள்ள சகிக்க முடியாத கனவுகள், வரலாறு சம்பந்தப்பட்ட கனவுகள், திருடர்கள் பற்றிய கனவுகள், நாய்கள் கடிப்பது போல, தொழிலில் தனக்கு மூத்தவர்களை வெளிப்படையாக எதிர்ப்பது போல, புரட்சி செய்வது போல, துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை கனவில் காண்பது, வெள்ளம் ஏற்படுவது போல, கொலை சம்பந்தப்பட்ட கனவுகள் வரும்.

ஆரம் மெட்டாலிகம்:

அமைதியற்ற தூக்கத்தில் பதட்டம் நிறைந்த கனவுகள், வாய்த்தகராறு செய்வது போல, தான் இறப்பது பற்றி பல கனவுகள், இறந்தவர்கள், சடலங்கள் நிறைந்த கனவுகள் வரும்..

அகோனைட் நேபில்லஸ்:

பதட்டம் நிறைந்த கனவால், பிதற்றிக் கொண்டும், அசைந்து கொண்டும் இருத்தல், கொடுங் கனவுகள், தனது எதிர்காலம் பற்றிய கனவுகள் வரும். இவ்வாறு குழப்பம் நிறைந்த நோயாளிகளின் கனவுகளைக் கொண்டும் கூட குணப்படுத்தி விட ஹோமியோபதி மருந்துகள் ஏராளமாக உள்ளன.

என்ன வாசகர்களே இந்தக்கட்டுரை மூலமாக கனவுகள் பற்றியும், மருந்துகள் தேர்வு செய்ய கனவுகளை உபயோகிக்கப்படுவது பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள்

தமிழ்நாட்டு பழமொழிகள்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
> - அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
> - அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
> - அசையாத மணி அடிக்காது
> - அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை. ... மேலும் பார்க்க
> - அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
> - அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
> - அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
> - அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
> - அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
> - அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து
> விடுவார்கள்.
> - அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
> - அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
> - அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை
> நீங்கும்.
> - அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
> - அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
> - அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
> - அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
> - அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
> - அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
> - அன்பே கடவுள்.
> - அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
> - அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
> - அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
> - அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
> - அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
> - அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
> - அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
> - அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
> - அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
> - அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
> - அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
> - அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
> - அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
> - அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
> - அதிக ஓய்வு அதிக வேதனை.
> - அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
> - அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
> - அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
> - அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
> - அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
> - அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
> - அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
> - அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
> - அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
> - அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
> - அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
> - அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
> - அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
> - அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
> - அரசனும் அன்னைக்கு மகனே.
> - அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
> - அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
> - அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
> - அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
> - அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
> - அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
> - அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
> - அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
ஆடிப்பட்டம் தேடி விதை.
> - ஆழம் தெரியாமல் காலை விடாதே!
> - ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
> - ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
> - ஆயுள் நீடிக்க உணவைக் குறை. ... மேலும் பார்க்க
> - ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
> - ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
> - ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
> - ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
> - ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
> - ஆறுவது சினம்.
> - ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
> - ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
> - ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
> - ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
> - ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
> - ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
> - ஆலை விழுது தாங்கியது போல.
> - ஆடு பகை குட்டி உறவா?
> - ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
> - ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
> - ஆரம்பத்தில் சூரத்துவம்.
> - ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
> - ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
> - ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
> - ஆற்றுநீர் பித்தம் போக்கும்
> குளத்து நீர் வாதம் போக்கும்
> சோற்றுநீர் எல்லாம் போக்கும்
> - ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
> இ
> - இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
> - இளமையில் கல்.
> - இளங்கன்று பயமறியாது.
> - இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
> - இளமையில் கல். முதுமையில் காக்கும்.
> - இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
> - இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
> - இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
> - இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
> - இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
> - இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
> - இறங்கு பொழுதில் மருந்து குடி.
> - இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
> - இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
> - இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
> - இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
> - இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
> - இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
> - இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
> - இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
> - இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
> - இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
> - இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
> - இடுக்கன் வருங்கால் நகுக.
> ஈ.
> - ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
> - ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
> - ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
> - ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
> - ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு
- உழுத நிலத்தில் பயிரிடு.
> - உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
> - உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
> - உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
> - உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ... மேலும் பார்க்க
> - உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
> - உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
> - உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
> - உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
> - உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
> - உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
> - உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
> - உழைத்து உண்பதே உணவு.
> - உப்பிட்டவரை உள்ளவும் நினை.
> - உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
> ஊ
> - ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை
> இருக்கிறது.
> - ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
> - ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
> - ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
> - ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
> - ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
> எ
> - எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
> - எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு
> எட்டுப் பணியாரம்.
> - எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
> - எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
> - எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க
> விட்டுப் போகுமே விக்கல்.
> - எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
> - எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
> - எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே
> இருக்கும்.
> - எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
> - எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
> - எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
> - எண்ணம்போல் வாழ்வு.
> - எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
> ஏ
> - ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
> - ஏழை சொல் அம்பலம் ஏறாது.
> - ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
> - ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
> - ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன்
> படாதே!
> - ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
> ஐ
> - ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
> - ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
> ஒ
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
> - ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
> - ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
> - ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
> - ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ... மேலும் பார்க்க
> - ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
> - ஒழுக்கம் விழுப்பம் தரும்.
> - ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
> - ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
> - ஒத்தடம் அரை வைத்தியம்.
> - ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
> - ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
> ஓ
> - ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
> - ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
> - ஓடிப் பழகிய கால் நிற்காது.
> - ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.
> க
> - கண்ணுக்கு இமை பகையா?
> - கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
> - கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
> - கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
> - கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
> கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
> பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
> - கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
> - கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
> - கடுங்காற்று மழைக்கூட்டும்.
> கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
> - கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
> - கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
> - கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
> - கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
> - கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
> - கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
> - கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
> - கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
> - கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
> - கல்வி விரும்பு.
> - கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
> - கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன
> தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
> - கணக்கு எழுதாதன் நிலைமை.
> கழுதை புரண்ட இடம் மாதிரி.
> - கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
> - கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
> - கடலில் கரைத்த பெருங்காயம் போல.
> - கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
> - கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
> - கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
> - கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
> - கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
> - கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
> கா
> - காலம் போகும் வார்த்தை நிற்கும்.
> - கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
> - கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
> - கார்த்திகை கன மழை.
> - கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
> - கார்த்திகை கண்டு களம் இடு.
> - கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
> - காணிச் சோம்பல் கோடி நட்டம்.
> - காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
> - காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
> - காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
> - காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
> - காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
> - காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
> - காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
> - காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
> - கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
> - கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
> - கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
> - கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
> கி
> - கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
> - கிட்டப் போயின் முட்டப் பகை.
> - கிட்டாதாயின் வெட்டென மற. ... மேலும் பார்க்க
> - கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
> - கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
> கீ
> - கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
> கு
> - குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
> - குருடனுக்கு ஒரே மதி.
> - குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
> - குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
> - குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
> - குதிரையும் கழுதையும் ஒன்றா?
> - குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
> - குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
> - குடி குடியைக் கெடுக்கும்.
> - குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
> - குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
> - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
> - கூழானாலும் குளித்துக் குடி.
> - கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
> - கூலிப் படை வெட்டுமா?
> - கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான். ... மேலும் பார்க்க
> கெ
> - கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
> - கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
> - கெடுவான் கேடு நினைப்பான்.
> - கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
> - கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
> கை
> - கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
> - கை பட்டால் கண்ணாடி.
> - கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
> கொ
> - கொடிக்கு காய் பாரமா?
> - கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
> கோ
> - கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
> - கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
> - கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும்
> காண்பது அரிது.
> - கோமளவல்லிக்கு ஒரு மொழி
> கோளாறுகாரிக்குப் பல மொழி
> - கோபத்திற்குக் கண்ணில்லை.
> கௌ
> - கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
> ச
> - சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
> சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
> - சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
> - சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
> சா
> - சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
> சி
> - சிறுதுளி பெருவெள்ளம்.
> - சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
> - சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
> - சித்திரை எள்ளைச்சிதறி விதை.
> - சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
> பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
> வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
> - சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
> - சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
> - சித்திரை மழை செல்ல மழை.
> சீ
> - சீரைத் தேடின் ஏரைத்தேடு
> சு
> - சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
> - சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
> - சுக்கைப் போல மருந்தில்லை.
> - சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
> - சுத்தம் சோறு போடும்.
> - சுற்றம் சூழ வாழ்
> - சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
> - சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
> சூ
> - சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
> - சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
> - சூதும் வாதும் வேதனை செய்யும்
> செ
> - செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
> - செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
> - செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
> சே
> - சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
> - சேற்றில் முளைத்த செந்தாமரை
> சோ
> - சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
> - சோம்பித் திரியேல.
> - சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?
> த
> - தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு?
> குடியாததை க்டது யாரு?
> - தண்ணீரே உணவகளின் அரசன்.
> - தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
> - பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
> - மனிதனுக்கச் சோதனை பெண்!
> - தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
> - தண்ணீரில் அடி பிடிக்கிறது.
> - தலை பகை, வால் உறவா?
> - தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
> - தலைக்குத் தலை பெரிய தனம்.
> - தன் தப்பு பிறருக்குச் சத்து
> - தன் உயிர்போல் மண் உயிர் நினை.
> - தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
> - தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
> - தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
> - தன் கையே தனக்கு உதவி.
> - தர்மம் தலை காக்கும்.
> - தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
> - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா
> - தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
> - தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
> - தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
> - தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம். ... மேலும் பார்க்க
> - தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
> - தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
> - தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
> - தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
> - தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
> - தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
> தி
> - திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
> - திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
> தீ
> - தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
> - தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
> து
> - துறவிக்கு வேந்தன் துரும்பு.
> - தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
> - துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
> - தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
> - துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
> - துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
> தூ
> - தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
> - தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
> - தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
> - தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
> - தூங்காதவனே நீங்காதவன்.
> - தூரமிருந்தால் சேர உறவு.
> தெ
> - தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
> - தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
> - தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
> - தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
> - தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
> - தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
> தை
> - தையல் சொல் கேளேல்.
> - தை பிறந்தால் வழி பிறக்கும்.
> தொ
> - தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
> ப
> - பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
> - பணம் பத்தும் செய்யும்.
> - பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
> - பணம் உள்ளவனுக்கு அச்சம்;
> - பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
> - பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
> - பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
> - பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
> - பல் போனால் சொல் போச்சு.
> - பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
> - பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
> - பங்குனி மாதம் பதர் கொள்.
> - பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
> - பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
> - படுக்க படுக்க பாயும் பகை.
> - பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
> - பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
> - பணம் பாதாளம் வரை பாயும்.
> பா
> - பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன். ... மேலும் பார்க்க
> - பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
> பி
> - பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
> - பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
> - பிச்சை புகினும் கற்கை நன்றே!
> - பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
> - பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
> பு
> - புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
> - புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
> - புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள
> முடியாது.
> - புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
> சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
> யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
> - புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
> - புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத்
> திரும்பச் சொல்கிறார்கள்.
> - புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
> முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
> பூ
> - பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
> - பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
> - பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
> - பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
> பெ
> - பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
> ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
> - பெண் என்றால் பேயும் இரங்கும்.
> - பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
> - பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
> சுவருக்கு மண்ணிட்டுப் பார்
> - பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
> பொ
> - பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
> - பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
> - பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
> அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
> - பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு
> உண்ணும்.
> - பொறுமை கடலினும் பெரிது.
> - பொறுத்தார் பூமி ஆள்வார்.
> - பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
> - பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
> போ
> - போகும்போது புளியமரத்தடியில் போ
> - வரும்போது வேப்பமரத்தடியல் வா.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
> - நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
> - நன்றி மறவேல்.
> - நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
> - நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம். ... மேலும் பார்க்க
> - நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
> - நன்மைக்கு நன்மை செய்
> தீமைக்கு நன்மையே செய்
> - நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
> - நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
> - நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
> நா
> - நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
> - நாளை என்பது நட்டாற்று ஓடம்.
> - நாளை என்று ஒருநாள் உண்டா?
> - நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
> - நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
> - நாளும் அதிகாலையில் நீராடு.
> - நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
> நி
> - நிலையாமை ஒன்றே நிலையானது.
> நீ
> - நீலிக்கு கண்ணீர் இமையிலே.
> - நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
> - நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ
> எண்ணிப்பார்.
> நெ
> - நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
> - நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
> நொ
> - நொறுங்கத் தின்றால் நூறு வயது.
> - நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
> நோ
> - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
> ம
> - மனம் போல வாழ்வு
> - மனம் ஒரு குரங்கு
> - மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
> - மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
> - மனைவி வீட்டின் ஆபரணம்.
> - மனைவி சொல்லே மந்திரம்.
> - மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
> - மனித நேயம் வளர்ப்பதே மதம்.
> - மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
> - மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
> - மதியாதார் வாசல் மிதியாதே!
> - மனசாட்சியை ஏமாற்றாதே!
> - மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத்
> தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
> - மந்திரம் கால்; மதி முக்கால்.
> - மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
> - மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
> - மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
> - மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
> - மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
> - மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
> - மாதா, பிதா, குரு, தெய்வம். ... மேலும் பார்க்க
> மி
> - மின்னுவதெல்லாம் பொன்னல்ல
> மீ
> - மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
> மு
> - முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
> - முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
> - முன் வைத்த காலை பின் வைக்காதே!
> - முயன்றால் முடியாதது இல்லை.
> - முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
> - முயற்சி திருவினையாக்கும்.
> மூ
> - மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
> - மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
> - மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப்
> போகிறான்.
> மை
> - மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
> வ
> - வட்டியோடு முதலும் போச்சு.
> - வளைகிற முள் நுழையாது.
> - வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
> - வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த
> கொள்ளலாம்.
> - வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால்
> நடப்பது கஷ்டம்.
> - வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
> - வண்டி வந்தால் வழி உண்டாகும்.
> - வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
> வா
> - வாய் உள்ளவன் உள்ளே.
> - வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
> - வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
> - வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
> - வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
> - வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த
> தடுக்கு.
> - வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
> கடந்த காலம் ஒரு கனவு
> வருங்காலம் ஒரு பெருமூச்சு
> - வாய் அரை வைத்தியன்.
> - வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
> வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
> வி
> - வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
> - விரலுக்கேற்ற வீக்கம்.
> - விளையும் பயிர் முளையிலே தெரியும்
> வீ
> - வீணை கோணினும் நாதம் கோணுமா?
> வெ
> - வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
> வே
> - வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்.

இலக்கங்கள் ஆச்சர்யம்

உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது ஏறு முக இலக்கங்கள்

ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred... மேலும் பார்க்க

1000 = ஆயிரம் -thousand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -?

இறங்கு முக இலக்கங்கள்

1 - ஒன்று

3/4 - முக்கால்

1/2 - அரை கால்

1/4 - கால்

1/5 - நாலுமா

3/16 - மூன்று வீசம்

3/20 - மூன்றுமா

1/8 - அரைக்கால்

1/10 - இருமா

1/16 - மாகாணி (வீசம்)

1/20 - ஒருமா

3/64 - முக்கால் வீசம்

3/80 - முக்காணி

1/32 - அரை வீசம்

1/40 - அரைமா

1/64 - கால் வீசம்

1/80 - காணி

3/320 - அரைக்காணி முந்திரி

1/160 - அரைக்காணி

1/320 - முந்திரி

1/102400 - கீழ் முந்திரி

1/2150400 - இம்மி

1/23654400 - மும்மி

1/165580800 - அணு

1/1490227200 - குணம்

1/7451136000 - பந்தம்

1/44706816000 - பாகம்

1/312947712000 - விந்தம்

1/5320111104000 - நாகவிந்தம்

1/74481555456000 - சிந்தை

1/489631109120000 - கதிர் முனை

1/9585244364800000 - குரல்வளைப்படி

1/575114661888000000 - வெள்ளம்

1/57511466188800000000 - நுண்மணல்

1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு

10 நுண்ணணு - 1 அணு

8 அணு - 1 கதிர்த்துகள்

8 கதிர்த்துகள் - 1 துசும்பு

8 துசும்பு - 1 மயிர்நுணி

8 மயிர்நுணி - 1 நுண்மணல்

8 நுண்மணல் - 1 சிறுகடுகு

8 சிறுகடுகு - 1 எள்

8 எள் - 1 நெல்

8 நெல் - 1 விரல்

12 விரல் - 1 சாண்

2 சாண் - 1 முழம்

4 முழம் - 1 பாகம்

6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)

4 காதம் - 1 யோசனை

பொன் நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி

2 குன்றிமணி - 1 மஞ்சாடி

2 மஞ்சாடி - 1 பணவெடை

5 பணவெடை - 1 கழஞ்சு

8 பணவெடை - 1 வராகனெடை

4 கழஞ்சு - 1 கஃசு

4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை

10 வராகனெடை - 1 பலம்

40 பலம் - 1 வீசை

6 வீசை - 1 தூலாம்

8 வீசை - 1 மணங்கு

20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

5 மரக்கால் - 1 பறை

80 பறை - 1 கரிசை

48 96 படி - 1 கலம்

120 படி - 1 பொதி

உங்கள் உடலுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள்

கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70... மேலும் பார்க்க ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.

இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.

ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.


மனிதனின் மூளை 100... மேலும் பார்க்க மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.

நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.

பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.

தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.

நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன.

A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B... மேலும் பார்க்க’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.



யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant... மேலும் பார்க்க – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை.

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo ... மேலும் பார்க்கarthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6 இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்ட... மேலும் பார்க்கும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

எல்லா வயதினருக்கும் ஏற்ற உச்சி முதல் பாதம் வரைக்கும் டிப்ஸ்.

கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளக்கெண்ணையை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப்பகுதிகளில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும்.
கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் சேர்த்துத் தடவவேண்டும்.

உதடு
... மேலும் பார்க்க
உதட்டில் வெண்ணையுடன், தேங்காய் எண்ணையைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும்.

முகம்

எண்¨ணைப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில டிப்ஸ்:
முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.
பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.
பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.)
ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும்
இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

தலைமுடி

தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும். (பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணையில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.)
நன்றாக தலையை மசாஜ் செய்யவும்
10 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு பcக்-ஆகப் போடவும். (மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.)
மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் இருக்கும

பாதம்

பாதம் சுத்தமாகவும், மிருதுவாகவும் இருக்க தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு கலந்து, குளிக்குமுன் 15 நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.